அறிமுகம்!

நேயர்களுக்கு வணக்கம்!
         நான் உங்கள் ஞானம் கோவிந்தசாமி இந்த பதிவை நமக்கான அறிமுக பதிவாக கொண்டு எழுதுகிறேன். இந்த பதிவு மற்றும் இதன் பின்னர் வரும் பதிவுகள் தமிழர்களுக்காகவும்,தமிழ் மொழியின் பெருமையை, சிறப்பையும், தன்மையையும் பற்றி இந்த நவீன தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கம் கொண்டு பதிவிடுகிறேன். நமது தமிழ் நாட்டின் பெருமையை, வீரத்தை இந்த உலகெங்கும் புகழ் பரப்பிய பல மன்னர்கள், வீரர்கள் இம்மண்ணில் வாழ்ந்தனர் அவர்களைப் பற்றியும் அவர்களின் வீரம், ஆளுமை திறன், அறிவியல் சார்ந்த அறிவு போன்ற பல வறலாற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
      ''கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிமக்கள் "என்ற வாக்கியத்தின் படி நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த காலத்தை, நமது வறலாற்றை அறிந்து கொள்வது நமது கடமை. நமது வரலாற்றை நாம் தானே அறிந்து பாரெங்கும் பரப்புவதும் நமது கடமை தானே.
       மற்ற நாட்டு மக்கள் அவர்களின் வறலாற்றை அனைத்து மக்களும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்த நாட்டில் எத்தனை பேர் அவர்கள் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து வைத்துள்ளனர். நமது வரலாற்றை பற்றி தெரியாததை விட வேறு அவமானம் இல்லை.
        நமது முன்னோர்கள் பலர் வறலாற்றை சுவடிகளில் குறித்து வைத்துள்ளனர். அவற்றை அறிந்து ஆராய்ச்சி செய்து பல புத்தகங்களை கொடுத்துள்ளனர். வரலாற்றை அறிந்து கொள்ள கலைநயமிக்க,கதையம்சங்களுடன் புதினங்கள் பல உள்ளன.ஆனால் அதை பலர் அறிந்திருக்கவில்லை எனவே அவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், நான் படித்த அந்த புதினங்களை கதை வடிவில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
    சரித்திர நாவலின் நாயகன் திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் சிறந்த வரலாற்று சரித்திர நாவல்கள். இது போன்ற பல ஆசிரியர்கள் பல சரித்திர நாவல்களை இயற்றியுள்ளனர்.இந்த சரித்திரங்களை சாதாரண மக்களும் அறிந்து கொள்ள வேண்டி கதை வடிவில் பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே எந்தன் முயற்சிக்கு  நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்கிறேன். எனது பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை கருத்துக்கள் மூலம் பதிவிடலாம்.
அடுத்த பதிவில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்று புதினத்துடன் சந்திப்போம்.
        " தமிழின் பெருமையை உரக்க சொல்வோம் உலகிற்கு ". _ வணக்கம்.

No comments:

Post a Comment